வாக்குச் சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நோக்கி நகர்ந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் அடித்துச் சொல்கிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதம் எழுந்து அடங்கும். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள், அதைத் தொடர்ந்து கைது, அதிகாரிகள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது.
[zombify_post]