நடிகர் பிரபு

Actor Prabhu: இந்த கேரக்டர்களுக்கெல்லாம் பிரபுதான் அடையாளம் – திரையில் முத்திரை பதித்த இளைய திலகம்!

இன்னைக்கு சில படங்கள்ல மட்டும் தலைகாட்டுற நடிகர் இளையதிலகம் பிரபுவுக்கு அடையாளம்னு சொல்லக் கூடிய பல படங்கள் இருக்கு. ஆனா, அதுல சில படங்கள்ல பிரபு இல்லாம நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த படங்கள் என்னென்ன… என்ன காரணம்னு பார்க்கலாம்.

சின்னத்தம்பி!

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

கிராமங்கள் கொண்டாடும் நாயகன் வரிசைல பிரபுவுக்கு ஆழமான அடையாளம் கொடுத்த படம் சின்னத்தம்பி. இன்னைக்கு நாம கொண்டாடுற தெய்வத்திருமகள் விக்ரமுக்கு இணையா, அப்பவே குழந்தையா மாறி நடிச்சிருப்பார், பிரபு. வெள்ளித்தட்டுல சாப்பிட்டு, பென்ஸ் கார்ல போற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபுவா அன்னைக்கு வலம் வந்தக் காலகட்டம். அப்போ சின்னத்தம்பி படத்துல தாலி பத்தி எதுவும் தெரியாதுனு பிரபு சொல்ற சீனை மொத்த தமிழ்நாடும் நம்புச்சு. அதுக்குக் காரணம், பிரபுவோட பெர்ஃபார்மன்ஸ்தான். தலைவன் அப்பவே வேற ரகம்.

குருசிஷ்யன்!

குரு சிஷ்யன்
குரு சிஷ்யன்

டுயல் ரோல்.. ரஜினிக்கு ஈக்குவலான கேரக்டர். குருவுக்கு உண்மையாக இருக்கும் சிஷ்யன் கேரக்டர். ரஜினியைத் திரையில் பிரபு அடிக்கும் காட்சிக்கு தியேட்டரில் எதிர்ப்புக் குரல்களே இல்லை. இது ரஜினி படம்தான் என இருந்தாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமா பண்ணியிருந்தார். அந்தப் படத்தின் ஹீரோ – ஹீரோயின்களோட கெமிஸ்ட்ரியைவிட ரஜினி-பிரவுவோட கெமிஸ்ட்ரி திரையில் வொர்க் அவுட் ஆச்சு. இந்த சிஷ்யன் கதாபாத்திரத்தை பிரபு தவிர, யார் பண்ணியிருந்தாலும் நிச்சயம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மை வந்திருக்குமாங்குறது சந்தேகம்தான்..

அக்னி நட்சத்திரம்!

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

பிரபு, கார்த்தி ஆகிய இரண்டு பேருக்குமே சரிசமமான ரசிகர்கள் இருந்த காலகட்டம் அது… இரண்டு பேருக்கும் இடையேயான ஈகோதான் கதையே. கார்த்திக்கு இணையாக ஈடுகொடுக்கும் போலீஸ் கேரக்டரில் மிரட்டியிருப்பார், பிரபு. இந்த படத்தின் டுயல் ஹீரோ சாயல் நேருக்கு நேர் படத்திலும் இருக்கும்..

சிறைச்சாலை!

சிறைச்சாலை
சிறைச்சாலை

நான் innocence மட்டும் இல்லை. நல்ல கேரக்டரும் பண்ணத் தெரியும் என தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய படம் சிறைச்சாலை. ஒரு கைதி சிறைக்குள் இருந்து திரும்ப திரும்ப தப்பிக்க முயற்சி செய்யும் கதாபாத்திரம். உண்மையான சுதந்திரப் போராட்ட வீரன் இப்படித்தான் இருந்திருப்பார் என்று கண்முன்னே நிறுத்தியிருந்தார் பிரபு.

பசும்பொன்

பசும்பொன்
பசும்பொன்

பாசத்துக்காக ஏங்கும் மகனாக நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார், நடிகர் பிரபு. அண்ணன் தம்பிகளுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் என்றாலும், ஒரு அண்ணன் இப்படி பெருந்தன்மையாக நடந்து கொள்வான் என்று நூல் பிடித்து நடித்திருப்பார், பிரபு. இந்த படத்துக்கு கதையும் வசனமும் நம்ம அண்ணன் சீமான்தான்.

பட்ஜெட் பத்மநாபன்!

பட்ஜெட் பத்மநாபன்
பட்ஜெட் பத்மநாபன்

அப்பா கட்டிய வீடு அடமானத்துக்கு போகும் சூழல்ல, அதை மீட்கப் போராடுகிற ஒரு மிடில்கிளாஸ் மகன் கேரக்டர். தன்னோட கல்யாணத்துக்குக்கூட பட்ஜெட் போடும் அசத்தல் நடிப்பு பிரபுவால் மட்டுமே சாத்தியம். ஒரு கமர்சியல் சினிமாவில் பட்ஜெட்டை புகுத்தி ட்ரென்ட்செட்டராக மாறினார், பிரபு.

மைடியர் மார்த்தாண்டன்

மை டியர் மார்த்தாண்டன்
மை டியர் மார்த்தாண்டன்

சின்னத்தம்பி போல மீண்டும் உலகமறியாத ஹீரோ கேரக்டர். சின்னத்தம்பியில் தாலி பற்றி தெரியாதவருக்கு, இந்த படத்தில் பணத்தின் மதிப்பு தெரியாத கதாபாத்திரத்திரம். காமெடியில் கவுண்டமணியுடன் சேர்ந்து அசத்தியிருப்பார், பிரபு.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்!

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

கிட்டத்தட்ட குருசிஷ்யன் கேரக்டர் போலத்தான். எதைச் சொன்னாலும் ஏன்?, எதற்கு எனக் கேட்காமல் செய்யும் வட்டி கேரக்டரில் கமலின் வலதுகரமாக நடித்திருப்பார், பிரபு. ரெளடியாக இருந்தாலும் எதையும் விளையாட்டுத்தனமாகவே செய்யும் கேரெக்டரில் புகுந்து விளையாடியிருப்பார். இதிலும் கமல்- பிரபு கெமிஸ்ட்ரி திரையில் நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். சீனா தானா பாடலுக்கு ரகசியாவுக்குப் பின் பிரபுவின் நடனத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

Also Read –

vedham pudhithu: தமிழ் சினிமாவை அதிரவைத்த `வேதம் புதிது’ – எம்.ஜி.ஆர் பார்த்த கடைசிப் படம்!

தாமிரபரணி!

தாமிரபரணி
தாமிரபரணி

விஷாலுக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். மருமகனுக்காக சுதந்திரம் கொடுக்கும் நிலை, அதே மருமகன் தவறு செய்யும்போது பார்வையால் கண்டிப்பது, அதே மருமகனுக்காக கோபத்தில் பொங்கி எழுவது என குலையன் கரிசல் சரவண பெருமாளாகவே வாழ்ந்திருப்பார், பிரபு.

அயன்!

அயன்
அயன்

கடத்தல் தொழில் செய்தாலும், அதை நியாயமாக செய்ய வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருககும் கேரக்டர்.. அந்த கேரக்டருக்கு பிரபுவைத் தாண்டி வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அத்தனை தொல்லைகள் தரும் வில்லனிடம்கூட நிதானத்துடன் கூடிய பாசத்தை அயன் தாஸைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது.

1980 காலக்கட்டத்தில் அதிரடியான ஹீரோக்கள், காதலை மட்டும் செய்யும் ஹீரோக்கள் என்று தனித்தனியாக இருந்த நிலையில், innocence கேரக்டருடன அத்துணையுமாக கலந்த நான் இருக்கிறேன் என்று தன் இருப்பை வெளிப்படுத்தியவர். innocence கேரக்டரை தமிழ் சினிமாவில் பிரபுவுக்குப் பிறகு யாரும் முயற்சிக்கவில்லை, இனி முயற்சி செய்யப்போவதும் இல்லை.

Also Read – VK Ramasamy: வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 `நச்’ காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top