சுஜாதா மேஷ்அப் – 10 சுவாரஸ்யங்கள்!

எழுத்தாளர் சுஜாதாவின் ஜோக்ஸ், கேள்வி - பதில், அட்வைஸ்கள், படிக்க வேண்டிய புத்தகங்களை இங்கே தொகுதித்திருக்கிறோம். 1 min


Sujatha
Sujatha

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் இன்று. சுஜாதாவின் முதல் கதை சிவாஜி என்ற பத்திரிக்கையில்  1953-ம் ஆண்டு வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கட்டுரைகள், திரைக்கதைகள், வசனங்கள் எனப் பல துறைகளில் சுஜாதா முத்திரை பதித்துள்ளார். அவரைப் பற்றிய சின்ன மேஷ்அப்தான் இந்த கட்டுரை.

  1. 1 அது புலியே இல்லை!


    கேள்வி : ஒரு புலி நம்மளை திங்காம, சாந்தமாப் பார்த்தா என்ன அர்த்தம்?

    பதில் : அது புலி இல்லைனு அர்த்தம்.

  2. 2 கடவுள் இருக்காரா... இல்லையா?


    கேள்வி : கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?

    பதில் : கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!

  3. 3 இந்தியன்


    தான் செய்யறது தப்புன்னே உறைக்காத அளவுக்கு உங்களுக்கு தப்பு பழகிப்போச்சுடா!

  4. 4 உள்ளம் கேட்குமே


    நாம நம்ம மனசு என்ன சொல்லுதோ அதுபடி கேட்போம். ஹார்ட் ரூலர்ஸ். பட், ப்ரியா, அவ புத்தி என்ன சொல்லுதோ அதுபடிதான் கேட்பா.. மைன்ட் ரூலர்

  5. 5 அந்நியன்


    தப்பென்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு? விளைவோட சைஸைப் பாருங்க.. எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!

  6. 6 மெமரீஸ்


    எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய கல்லூரிப் புகைப்படம் ஒன்றைப் பற்றி பகிர்ந்தவை... ``அடையாளமற்ற, முகமற்ற சுமார் 100 இளைஞர்கள், வாழ்வின் விளிம்பில் மாரத்தான் ஓட்டம் போலப் புறப்பட்டோம். இன்று 55 ஆண்டுகள் கழிந்த பின் பலர் சிறந்தோம்; சிலர் இறந்தோம்; அமெரிக்கா சென்றோம்; கார்கள் தயாரித்தோம்; கவிதைகள் எழுதினோம்; டாக்டர்களானோம்; ஹோட்டல்கள் வைத்தோம்; வெள்ளைக்காரிகளை மணந்தோம்; ராணுவத்தில் சேர்ந்தோம்; எழுத்தாளர் ஆனோம்; பாரத தேசத்தின் குடியரசுத் தலைவர் ஆனோம்... ஒரு சேரத்தான் புறப்பட்டோம் மாரத்தான் போல!”

  7. 7 சுஜாதாவின் கட்டளைகளில் இரண்டு


    |) மூன்று மணிக்குத் துவங்கும்  மதிய ஷோ  போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண  வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.

    ||) ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.

  8. 8 மெக்ஸிகோ சலவைக்காரி!


    சுஜாதா தன்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளில் சொல்கிறேன்.. சொல்கிறேன்.. என்று கடைசி வரை சொல்லாமல் போன நகைச்சுவை ஒன்று உள்ளது. அந்த நகைச்சுவையின் தலைப்பு `மெக்ஸிகோ சலவைக்காரி!’ அவர் இறந்த பிறகும் பலர் இந்த தலைப்பின் கீழ் நகைச்சுவையை சொல்லி வருகின்றனர். உங்களுக்கு தெரியுமா அந்த ஜோக்?!

  9. 9 சுஜாதாவோட எந்த புக் படிக்கலாம்?


    |) என் இனிய இயந்திரா 

    ||) கற்றதும் பெற்றதும் 

    |||) புறநானூறு: ஓர் எளிய அறிமுகம்

  10. 10 சுஜாதா ஜோக்ஸ்


    சிவப்பு விளக்கு பகுதியில் மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா..? - நிறையவே உண்டு பச்சை விளக்கு எரிந்தவுடன் சென்றுவிடுவேன்...


Like it? Share with your friends!

407

What's Your Reaction?

lol lol
33
lol
love love
29
love
omg omg
20
omg
hate hate
28
hate
Ram Sankar

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
`பிறவிக் கலைஞன்’ நாசரின் மறக்க முடியாத ரோல்கள்! ஸ்டீரியோடைப்பை உடைத்த தமிழ் சினிமா ஹீரோயின்களின் ரோல்கள்! தனுஷ் முதல் சரத்குமார் வரை… கோலிவுட்டின் ஃபுட்பால் லவ்வர்ஸ்! உடல் எடைக்குறைப்பில் உதவும் கோடைகால உணவுகள்! தினசரி உணவில் மீன் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா?!