யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்… ஈ.சி.ஆர் விபத்துக்கு முன் என்ன நடந்தது?

மகாபலிபுரம் அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் சையத், அமீர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவரது நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கு முன் என்ன நடந்தது.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

ஜீவா நடித்த கவலை வேண்டாம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ஆனால், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராகப் பங்கெடுத்ததே அவரை லைம்லைட்டில் கொண்டு நிறுத்தியது. பிக்பாஸ் வீட்டுக்குள் 18 வயதில் நுழைந்த அவர் 2 வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இறுதிச் சுற்று வரை முன்னேறி அசத்தினார். அந்த சீசனில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் யாஷிகா. அதன்பின்னர், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி என வரிசையாக பல படங்களில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்திருக்கும் கடமையை செய் படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் முடித்துக் கொடுத்த யாஷிகா, கடந்த 24-ம் தேதி மகாபலிபுரத்துக்கு நண்பர்களோடு சென்றிருக்கிறார்.

விபத்து

யாஷிகா - வள்ளிசெட்டி பவானி

மகாபாலிபுரத்தில் இருந்து சென்னைக்கு யாஷிகா, தனது தோழி வள்ளிசெட்டி பவானி மற்றும் நண்பர்கள் சையத், அமீர் ஆகியோருடன் காரில் நள்ளிரவு 12 மணியளவில் திரும்பியிருக்கிறார். அவரது கார் மகாபாலிபுரம் அருகிலிருக்கும் சூளேரிக்காடு செக் போஸ்ட் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்ததாகச் சொல்கிறார்கள். இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு இடுப்பு, கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. யாஷிகாவும் அவரது நண்பர்களும் மகாபலிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விபத்து முன்பு என்ன நடந்தது?

யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவானி ஹைதாராபாத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் இருக்கும் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் அவர் இந்தியா வருகையில் யாஷிகாவோடு நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நண்பர்களோடு லாங் டிரைவ் செய்வது யாஷிகாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு என்கிறார்கள். அந்தவகையில், கடந்த 24-ம் தேதி மகாபலிபுரம் சென்ற அவர், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்னை திரும்புவதற்காக காரில் கிளம்பியிருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் விபத்து

யாஷிகா காரில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாஷிகாவின் நண்பர்களுள் ஒருவர் எடுத்ததாகக் கூறப்படும் அந்த வீடியோவில் யாஷிகா கார் ஓட்டுவது போன்ற காட்சிகளும் முன் இருக்கையில் பவானி இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோ விபத்து சிறிதுநேரம் முன்பாக எடுக்கப்பட்டது என்கிறார்கள். மதுபோதையில் யாஷிகா காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. யாஷிகாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீஸார் விபத்து தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஐபிசி பிரிவு 279(ராஷ் டிரைவிங்), பிரிவு 304A (அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி உயிரிழப்புக் காரணமாக இருத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. விபத்து குறித்து தகவலறிந்த யாஷிகாவின் தந்தை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

Also Read – `நூறு ரூபாய் கூட வைக்க மாட்டியா’- துரைமுருகன் வீட்டில் எழுதிய கொள்ளையன் சிக்கியது எப்படி?

3 thoughts on “யாஷிகா ஆனந்த்… ஈ.சி.ஆர் விபத்துக்கு முன் என்ன நடந்தது?”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

  2. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top