Lock down

டல்கோனா, கேரம்போர்டு, ஜும் அலப்பறை… லாக்டௌன் ஜாலி ரீவைண்ட்! #OneYearOfLockdown

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகம் முழுவதும் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீ போல அது பரவி வருகிறது. அதனால் உலக நாடுகள் படும் கஷ்டத்தைப் பார்த்து, சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரஸ் ஆபத்திலிருந்து தப்ப ஒரே வழி என வல்லுநர்கள் கூறுகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

லாக்டௌன்

2020ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் லாக்டௌன் உத்தரவு அமலுக்கு வந்தது. அனைத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு, தனியார் அமைப்புகள் போன்றவை மூடப்பட்டன. பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. `இது ஊரடங்கு போன்றது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், மாவட்டமும், கிராமத்திலும் லாக்டௌன் போடப்படுகிறது. ஜனதா ஊரடங்கு போலல்லாமல், கடுமையாகக் கடைபிடிக்கப்படும்’ என்று 21 நாட்கள் லாக்டௌன் விதிக்கப்படுவதாக பிரதமர் மோடி அப்போது கூறினார்.

லாக்டௌனில் புலம்பெயர் தொழிலாளர்களால் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே போனது. உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே அன்றாடங்காய்ச்சிகள் அல்லல்பட்டது என பல்வேறு விஷயங்கள் நடந்தன. மறுபுறம் துயரத்தில் இருக்கும் மக்களுக்கான உதவிக்கரங்கள் நீண்டன. சாதாரண மனிதர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்தனர். பெருநகரங்களில் முடங்கியிருந்த தொழிலாளர்களுக்குத் தங்களது வீடுகளிலேயே சமைத்து, அவர்களுக்கு நேரடியாகச் சென்று உணவு வழங்கிய லட்சக்கணக்கானோரை இந்தியா கண்டுகொண்டது. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைத் தனது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் பாலிவுட் நடிகர் சோனு சூத்.

ஜாலி ரீவைண்ட்

கொரோனா ஊரடங்கில் மக்கள் வீடுகளை விட்டு அத்தியாவசியமில்லாத வேலைகளுக்காக வெளியே வர வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியிருந்த நிலையில், பல காமெடிகள் நாடு முழுவதும் அரங்கேறின.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top