பீகார் மாநிலத்தை சேர்ந்த ரிங்கு (சாரா அலிகான்) வீட்டை எதிர்த்து அவர் காதலிக்கும் சஜத்தை (அக்ஷய் குமார்) கரம்பிடிக்க ஆசைப்படுகிறார். ஆனால், ரிங்குவின் பாட்டி தல்ஹயன் (சீமா பிஸ்வாஸ்) ஒரு லேடி ஹிட்லர் என்பதால் இவரை எப்போது பார்த்தாலும் அடித்து நொறுக்குகிறார். `ரெண்டு நாள்ல இவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சே ஆகணும்’ என்று சொல்லி ‘யாரையாவது தூக்கிட்டு வாங்க’ என்று குடும்பத்தாருக்குக் கட்டளை விதிக்கிறார். அந்த சமயம் இவர்களது வலையில் சிக்குறார் அந்த ஊருக்கு மெடிக்கல் கேம் வந்த விஷு (தனுஷ்). ரிங்குவையும், விஷுவையும் மயக்கம் அடையச் செய்து இருவருக்கும் திருமணம் நடத்தி டிரெயின் ஏற்றி விடுகிறார்கள். ஏற்கனவே, நிச்சயதார்த்தம் ஆன விஷு, `நான் என் ஆளைக் கல்யாணம் பண்ணிக்குறேன், நீ உன் ஆளைக் கல்யாணம் பண்ணிக்க’ என்று சொன்னதும் ரிங்குவும் ஜாலியாக அவரது காதலன் சஜத் வரும் வரை விஷுவின் பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கிவிடுகிறார். ஆனால், விஷுவுக்கு ரிங்குவைப் பிடிக்க, ரிங்குவுக்கு சஜத்தைப் பிடிக்க பின் ரிங்குவுக்கு விஷுவைப் பிடிக்க என்று முக்கோண காதல் கதையாக மாறுகிறது. இறுதியில் யாருக்கு யாரைப் பிடித்தது என்பதை டிவிஸ்ட் கலந்து சொல்லியிருக்கிறது படம்.
0 Comments