`சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ எனப் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம்தான் ஜகமே தந்திரத்தின் ஒன்லைன். அப்படித்தான் படம் ஆரம்பிக்கும்போது தெரிந்தது. ஆனால், படம் தன்னால் ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டி, பார்க்கும் நம்மையும் சோதித்துவிட்டது.
மதுரையின் லோக்கல் ரவுடி ப்ளஸ் பரோட்டா மாஸ்டராக இருப்பவர் சுருளி (தனுஷ்). இவர் செய்த ஒரு கொலையால் ஒரு மாத காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த சமயம் லண்டனில் ஒரு ப்ராஜெக்ட் வருகிறது. இதைப் பயன்படுத்தி லண்டன் தாதா ஆகிடலாம் என பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு லண்டன் பறக்கிறார் தனுஷ். அங்கிருந்து ஆரம்பமாகிறது ̀ஜகமே தந்திரம்’.
0 Comments