தான் உண்டு தான் வேலை உண்டு தான் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வருபவர் கண்ணபிரான் (சூர்யா). இவர் பக்கத்து கிராமத்து ஆதினியை (பிரியங்கா மோகன்) காதலித்து கரம்பிடிக்கிறார். அதே கிராமத்தில் அரசியல் செல்வாக்கு உடைய தொழிலதிபர் இன்பா(வினய்). தன்னுடைய ஆதாயத்திற்காக நிழலுலகத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதை வீடியோ எடுத்து மிரட்டி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிறார். இந்த இருண்ட உலகத்தில் கண்ணபிரானின் மனைவியான ஆதினியும் மாட்டிக்கொள்கிறார். இதில், தலையிடும் கண்ணபிரானுக்கு தன் மனைவி போலவே 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. வில்லன் கும்பலை தண்டித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விடுதலை வாங்கித் தருவதுதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதை.
0 Comments