கர்ணா (ஜி.வி.பிரகாஷ்) சின்னச் சின்ன திருட்டுகளை செய்பவர். அவரது உயிர் நண்பன் ராக்கி (நந்தன் ராம்) ஏரியாவில் கஞ்சா விற்பவர். இன்னொருவர் கலை (பாண்டி). சாக்லெட் திருடிய குற்றத்திற்காக ஜெயில் சென்று வந்திருப்பவர். காவேரி நகரின் இளைஞர்கள் மீது பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளும் ஆய்வாளர் ரவி மரியா. இருப்பினும் கஞ்சா விற்று வரும் பணத்தில் பாதி பங்கு வாங்கி ஏரியா இளைஞர்களோடு சமரசமாய் போகக்கூடியவர். நன்றாக போய்க்கொண்டிருக்கும் அந்த மூவரது வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. விளைவாக ஒருவர் கொல்லப்படுகிறார், ஒருவர் ஜெயிலுக்குள் செல்கிறார், ஒருவர் விடை தேடி வெளியே அலைகிறார். இதுதான் படத்தின் கதை.
கண்ணகி நகரை காவேரி நகர் என்று பெயர் மாற்றம் செய்து அந்த பகுதி மக்களின் வாழ்வியலை சொல்ல முயற்சி செய்திருக்கும் படமே ஜெயில்.
0 Comments