நவரசா – உணர்ச்சிகளைக் கடத்துகிறதா?

Story Line

கோலிவுட்டின் டாப் நட்சத்திரங்கள், நடிகர்கள், வளர்ந்து வரும் இயக்குநர்கள் என இவர்களை வைத்து புது முயற்சியாக நவரசாவை தயாரித்திருக்கிறார் இயக்குநர் மணி ரத்னம். கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் என 9 ரசத்தை வைத்து 9 படமாக தயாராகி நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், பார்வதி, ரேவதி, பிரகாஷ் ராஜ், அதர்வா, யோகி பாபு, பாபி சிம்ஹா என ஏகப்பட்ட நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ரசமும் அந்த ரசம் எடுத்து சொல்லும் ஃப்ளேவரில் கதை அமைந்திருக்கிறது. 30-ல் இருந்து 48 நிமிடங்கள் வரை ஒவ்வொரு எபிசோடின் நீளமும் மாறுபடுகிறது. மொத்தமாக எப்படி இருக்கிறது நவரசா?

கருணை : அண்ணனின் தற்கொலைக்கு விடை தேடும் விஜய் சேதுபதி.

சிரிப்பு : தான் தூற்றப்பட்ட அதே பள்ளிக்கூடத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் யோகி பாபுவின் கதை.

ஆச்சரியம் : வருங்காலம் என்ன என்பதை சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து சொல்லும் கதை.

அருவருப்பு : விதவை மகளின் நிலையை நினைத்து புழுங்கித் தவிக்கும் டெல்லி கணேஷின் கதை.

அமைதி : ஈழப் போராட்டத்தில் ஒரு சின்ன சம்பவத்தை மையப்படுத்திய கதை.

ரௌத்திரம் : தன்னுடைய அம்மாவின் அவல நிலையை கண்ட பின் வெதும்பித் தவிக்கும் மகன் – மகளின் கதை.

பயம் : கடந்த கால சம்பவம் ஒன்று பார்வதியை துரத்தி வந்திருக்கும் கதை.

தைரியம் : புதிதாக ஆர்மியில் சேர்ந்திருக்கும் அதர்வா நக்ஸல்ஸை தேடி காட்டுக்குப் போகும் கதை.

காதல் : வளர்ந்து வரும் இசையமைப்பாளரின் காதல் கதை.

நவரசா

WoW Moments 🤩

ஒவ்வொரு படத்திலும் கதை, திரைக்கதை நன்றாக அமைந்ததா என்பது சந்தேகம்தான் என்றாலும் ஒவ்வொரு படத்தின் டெக்னிக்கல் விஷயங்களும் நன்றாக அமைந்திருந்தது. செட்டில் ஆரம்பித்து, லைட்டிங், கேமரா ஆங்க்கிள், கலர்ஸ் லொக்கேஷன் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது.

எந்த நடிகரும் சொத்தப்பலாக தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தவே இல்லை. ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகிய இருவருடனும் விஜய் சேதுபதியின் உரையாடல், பார்வதி – சித்தார்த் காம்போவின் நடிப்பு, சூர்யாவின் துள்ளலான காதல் காட்சிகள், அரவிந்த் சாமியின் மேதாவித்தனம் நிறைந்த நடிப்பு, ‘பசங்க’ ஶ்ரீராம் பர்ஃபாமன்ஸ், டெல்லி கணேஷ் என ஒவ்வொருவரும் தங்களுடைய நடிப்பின் மூலம் அந்த பாத்திரத்திற்கான நியாயத்தை செய்திருக்கிறார்கள்.

கருணை: ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகிய இருவருடனும் தனித்தனியே விஜய் சேதுபதி தன்னுடைய வலியை எடுத்து சொல்லும் காட்சி, அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் டச்சிங்!

சிரிப்பு: லொக்கேஷனில் ஆரம்பித்து ஒளிப்பதிவு, செட் என படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், மேக்கிங் அனைத்தும் ரிச்சாக இருந்தது.

ஆச்சரியம்: மேதாவித்தனத்தில் ஆரம்பித்து தான் செய்த ஒரு பெரிய தவறு வரை அனைத்து எமோஷனையும் ஒருவித இறுக்கத்துடன் ஹேண்டில் செய்திருக்கிறார் அரவிந்த் சாமி.

அருவருப்பு: கும்பகோணத்தில் 1965 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். தி.ஜானகிராமனின் சிறுகதைக்கு திரைமொழியால் நியாயம் சேர்த்திருக்கும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

அமைதி: அமைதி என்கிற எமோஷனுக்கு நேரெதிரான போரைக் களமாக எடுத்துக்கொண்டு, ‘அமைதி இருக்கிறதா’ என கேள்வியோடு படத்தை முடித்திருப்பது அருமை.

கோபம்: இயக்குநராக அரவிந்த் சுவாமி நம்மை பிரமிக்க வைக்கிறார். கோபம் என்கிற எமோஷனுக்காக கதை எழுதாமல், கோபம் எப்படி மனிதர்களை மாற்றுகிறது என காட்டியிருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என படம் டெக்னிக்கலாகவும் மிரட்டலாக இருக்கிறது.

பயம்: பார்வதியின் பயந்து நடுங்கும் கண்களும், சித்தார்த்தின் குரூர சிரிப்பும்.

வீரம்: அடர் காட்டையும், அதன் அழகையும் ஆபத்தையும் அப்படியே பறவைக் கோணத்தில் கொண்டு வந்த ஒளிப்பதிவு அட்டகாசம். முப்பது நிமிடத்துக்குள் கச்சிதமாக கதையைக் கொண்டு சென்ற திரைக்கதை.

காதல்: ஆர்ப்பாட்டமில்லாத காதல், இளமை துள்ளும் வசனங்கள்.

விஜய் சேதுபதி

AWW Moments 😫

குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்தப் படத்தின் கதையும் இடம்பெறவில்லை. இதில் குரூப்புல டூப் என்பதுபோல் அரவிந்த் சாமி இயக்கிய ரௌத்திரம் மட்டும் நன்றாக இருந்தது. கதையாக சில குளறுபடிகள் இருந்தாலும் திரைக்கதையில் நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார் அரவிந்த் சாமி. இதுதானே எப்படியும் நடக்கப்போகிறது என்ற மற்ற படங்களின் ஸ்க்ரீன்ப்ளேவுக்கு மத்தியில் இது தனித்துத் தெரிந்தது. கார்த்திக் நரேன் இயக்கிய ஆச்சரியம் ஒரு முழுநீள படமாக எடுத்தால் நமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தெளிவாகுமோ என்னவோ. புது முயற்சியாக நன்றாக அமைந்திருந்தது.

கருணை: வெறும் 30 நிமிடங்களில் இந்த ரசத்தில் சொல்ல வரும் எமோஷனை முழுமையாக உணர முடியவில்லை.

சிரிப்பு: டைட்டில் சொல்ல நினைத்த சிரிப்பு எனும் ரசம்தான் துளியும் வரவில்லை.

ஆச்சரியம்: இடியாப்பம், நூடுல்ஸ் சிக்கலைக் கூட சரி செய்துவிடலாம்போல இதில் சொல்ல வரும் பல விஷயங்கள் சாதாரண பார்வையாளர்களுக்குப் புரியவில்லை.

அருவருப்பு: தேர்ந்தெடுத்த எமோஷனுக்கு ஏற்றமாதிரி இன்னும் கதையை அழுத்தமாக மாற்றியிருக்கலாம்.

அமைதி: அமைதியாக முடியவேண்டிய படத்தின் க்ளைமேக்ஸை வேண்டுமென்றே நெகட்டிவ்வாக முடிந்திருப்பது வருத்தம்.

கோபம்: வடசென்னை என்றால் இப்படித்தான் இருக்கும் என படங்களில் காட்டப்படும் தவறான விஷயங்கள் இதிலும் இருப்பது உறுத்தல்.

பயம்: ஆரம்பத்தில் வரும் செயற்கையான வசனங்கள்.

வீரம்: சில துணைக்கதாபாத்திரங்களின் அமெச்சூர் நடிப்பு. 30 நிமிடத்துக்குள் அடக்கிவிட முடியாத அரசியல் போராட்டங்களை சில வசனங்களில் அடக்கிவிடமுடியாத போதாமை.

காதல்: வழக்கமாக கௌதம் மேனன் படங்களில் பார்த்துப் பழகிய அதே ‘காதல்’.

நவரசா

Verdict

கண்களுக்கு குளிர்ச்சியான விஷுவல்கள் மட்டும் போதும் எந்த ரிஸ்கையும் எடுப்பேன் என்பவரா நீங்கள்… ‘நவரசா’ உங்களுக்கானது!

அரவிந்த்சாமி

Similar Movies to Watch

* ஆணும் பெண்ணும்
* சில்லுக்கருப்பட்டி
* புத்தம் புது காலை
* பாவக் கதைகள்

சூர்யா - பிரக்யா மார்ட்டின்

Rating

Direction

2/5

Casting

3/5

Music

2.5/5

Screenplay

2.5/5

Editing

2.5/5

Overall Rating

2.5/5