மணிமாறன் (பாரதிராஜா) எனும் கேங்ஸ்டரிடம்அடியாளாக வேலை பார்ப்பவர் ராக்கி (வசந்த் ரவி). இளம் ரத்தம் என்பதால் வேகத்தோடும் துடிப்போடும் வேலை பார்த்தும் வரும் ராக்கி, ஒரு கட்டத்தில் மணிமாறனை எதிர்க்கிறார். எதிர்பாராத ஒரு சூழலின்போது மணிமாறனின் மகன் உதய் (ரஷிகாந்த்) ராக்கியின் அம்மாவைக் கொன்று விடுகிறார். பழிவாங்க நினைக்கும் ராக்கி, சாதாரணமாக நாம் விளையாட்டுக்கு சொல்லும் ‘குடலை உருவி மாலையா போட்டுடுவேன்’ எனும் வார்த்தையை நிஜத்தில் அவருக்கு செய்து அவர் உதய்யின் சோலியை முடிக்கிறார். இதற்காக சிறைக்கு செல்லும் ராக்கி, 17 வருடங்கள் கழித்து திருந்தி வாழ நினைப்பதில் இருந்து தொடங்குகிறது கதை. இந்த 17 வருட இடைவெளியில் அவரது அக்கா தொலைந்து போக அவரைத் தேடும் ராக்கி, எதிர்பாராத ஒரு சூழ்நிலையின்போது மீண்டும் கத்தியைப் பிடிக்கிறார். அது எதற்காக என்பதுதான் ‘ராக்கி’யின் கதை.
முன் குறிப்பு : கனிந்த உள்ளம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்க்காதீங்க!
0 Comments