* படமே காமெடி களத்துக்கானதுதான் என்பதால் ஸ்க்ரிப்ட்டில் காமெடியில் கதகளியே ஆடியிருக்கலாம். அந்தளவிற்கு ஸ்பேஸ் இருந்தது. ஆனால், வெறும் சந்தானத்தையும் அவரது டைமிங் கவுன்டர்களையும் மட்டுமே நம்பி வசனங்களில் சொதப்புவது போல் இருந்தது.
* ஆங்காங்கே வந்த காட்சிகளில் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்கிற ஸ்டீரியோடைப் மனோபாவத்தை மாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அரைகுறையாக டிரெஸ் அணிந்து டிக்டாக் செய்வது, பாய் பெஸ்டியால் கல்யாணம் செய்தவர்கள் படும் கஷ்டம் போன்றவற்றை எல்லாம் வம்படியாகத் திணித்ததுபோல் இருந்தது.
* படத்தில் பல கேரக்டர்கள் வந்து போகிறார்கள். சந்தானத்தை தவிர அனைவரும் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து கதையில் மெனக்கெட்டிருந்தால் படம் வேறு லெவலில் வந்திருக்கும். காரணம் சில இடங்களில் சந்தானத்தை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருந்தது அப்படி வந்தவர்களின் பர்ஃபாமன்ஸ்.
* படத்தில் தேவையில்லாத ஆணிகள் நிறைய இருந்தது. அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை செம ஹ்யூமராக எடுத்திருக்கலாம்.
0 Comments