அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதையை படமாக இயக்கியிருக்கிறார் வசந்த் சாய். 1980 காலகட்டத்தில் திருமணம் எனும் பந்தத்திற்குள் சிக்கி எதெற்கெடுத்தாலும் எரிந்து விழும் கணவர் சந்திரனை (கருணாகரன்) ஒரே ஒரு சூழ்நிலையின் போது எதிர்த்து என்னவென்று கேட்கிறார் சரஸ்வதி (காளீஸ்வரி சீனிவாசன்). அந்த ஒரு வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாமல் சந்திரன் செய்யும் செயல். அதற்கு சரஸ்வதி என்ன செய்கிறார் என்பது முதல் கதை.
இரண்டாவது கதை தேவகியுடையது (பார்வதி திருவோத்து). அவருடைய 1995 காலகட்டத்து கணவராக மணி (சுந்தர் ராமு). தன்னுடைய ஆசைகளை டைரியில் எழுதும் பழக்கம் தேவகிக்கு இருக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழும் தேவகியின் டைரி எழுதும் பழக்கத்தை கணவர் மணி உட்பட குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களும் ஏற்க மறுக்கிறார்கள். தேவகி எவ்வளவு தவிர்த்தும் டைரியின் முதல் இரு வரிகளை உறக்க படிக்கிறார் கணவர் மணி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத தேவகி செய்யும் ஒரு செயல்தான் அவருடைய கதை.
மூன்றாவது கதை சிவரஞ்சனியுடையது (லட்சுமி ப்ரியா சந்திரமௌலி). அவருடைய 2007 காலகட்டத்து கணவராக ஹரி (கார்த்திக் கிருஷ்ணா). கல்லூரியில் தடகள வீராங்கானையாக இருக்கும் சிவரஞ்சனி, கடைசியில் கல்யாணம் ஆகி தன்னுடைய குழந்தை விட்டுச் சென்ற லன்ச் பாக்ஸை கொடுக்க பஸ்ஸை துரத்தி வெறிகொண்டு ஓடுகிறார். இதுதான் சிவரஞ்சனியின் கதை.
0 Comments