* வாவ் என்று சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு விஷயமுமோ மேஜிக்கையோ படம் க்ரியேட் செய்யவில்லை. இதுவரை பார்த்து பழகிய அரசியல் படங்கள், அதில் ஹீரோ மேல்தட்டில் உட்கார்ந்திருக்கும் அதிகார அரசியல்வாதியை கவிழ்க்க செய்யும் செயல்கள் என அமைதிப்படையில் இடம்பெற்ற அதே டாம் அண்ட் ஜெர்ரி அரசியல் வகையறாதான் துக்ளக் தர்பார் படத்திலும் இடம்பெற்றிருந்தது.
* மஞ்சிமா மோகனின் வசன பேப்பர் 3 வரிகளைத் தாண்டியிருக்காது. இறுக்கமான முகத்தோடு அவ்வப்போது சில வசனங்களை பேசியிருக்கிறார், அழுதிருக்கிறார், சிரித்திருக்கிறார். அவ்வளவுதான். ராஷி கண்ணா ஸ்க்ரீனில் வந்து போகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே.
* நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி – பார்த்திபன் காம்போவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் கொஞ்சமும் எடுபடவில்லை. அதில் இருந்த பார்த்திபன் இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தை நினைத்தாலே குறைந்தது அவரது 5 வசனங்களையாவது சொல்லிவிடலாம். அந்தளவிற்கு ரெஜிஸ்டரானது அவரின் கேரக்டர். துக்ளக் தர்பார் அப்படியான ஒரு மேஜிக்கை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
* இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் மொத்த படத்தையும் மேலோட்டமாக அணுகியிருக்கிறார். எந்த ஒரு தெளிவும் இல்லாமல் நுணுக்கம் இல்லாமல் மிகவும் ஃப்ளாட்டாக எடுத்திருக்கிறார். இதனால்தான் பார்க்கும் நமக்கு திரைக்கதையோடு ஒன்ற முடியவில்லை. காமெடி டிராக்கை எடுத்திருந்தால் முழுக்க அதில் பயணித்திருக்க வேண்டும். பாதி காமெடி பாதி சீரியஸ் என்றால் அதற்கான முயற்சியை திரைக்கதையிலும், வசனங்களிலும் கடத்தியிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் சுமாரான ஒரு ஃபார்மட்டை ஃபிக்ஸ் செய்து படத்தை டீல் செய்திருக்கிறார்.
0 Comments