``சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ!’ - `அமைதிப்படை' படத்தின் அட்டகாச 10 டயலாக்குகள்!

சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம், `அமைதிப்படை’. இன்றுவரை சிறந்த அரசியல் சட்டயர் திரைப்படமாக கொண்டாடப்படும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த வசனங்கள் இங்கே...

“”

``ஏனப்பா… ஆளு ஆறு, ஏழடி இருந்துட்டு அரை மூடி தேங்காய குனிஞ்சு பொறுக்கிட்டு இருக்கியே… தப்பில்லையா அது?’’ ``மனுசன் தேங்கா பொறுக்கறது தப்புனா சாமிக்குத் தேங்கா உடைக்கறதும் தப்பு தானங்கணா” ``எங்கிட்டயே நாத்திகம் பேசுறியா நீ…” ``உண்மைய பேசுறதுக்குப் பேரு நாத்திகமாங்கணா?”

“”

முடியாதுன்னு நெனச்சிருந்தா மனுசன் குரங்காவே இருந்திருப்பானுங்க… இப்பங்ணா… முடியும்னு நெனச்சங்காட்டித் தானுங்கனா வெள்ளக்காரன் நிலால போயி கால வச்சானுங்… முடியாதுன்னு நினைச்சதுநாலதான் நாம இன்னும் நிலா சோறு ஊட்டிக்கிட்டே இருக்குறம்ங்...

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

“”

எந்த தொழிலா இருந்தாலும் கேவலம் இல்லைங்க… ஆடுமேச்சுட்டு இருந்தாரு யேசுநாதரு… உலகத்துல அவருக்கு சிலுவை இல்லாத இடமேயில்ல… அதேமாதிரி, ஆப்ரகாம் லிங்கன் செருப்பு தைச்சிட்டு இருந்தாரு… அமெரிக்கா பூரா அவருக்கு சிலை இருக்குது.

“”

``ஒவ்வொருத்தர் பொறந்த நாளைக்கும் சாக்லேட் கொடுப்பாங்க… கேக் கொடுப்பாங்க… நீங்க அல்வா தர்றீங்க?” ``மத்தவங்கள பத்தி எனக்குத் தெரியாதுங்க… நான் எப்பவுமே எல்லாருக்கும் அல்வா கொடுக்கறதுதாங்க பழக்கம்!”

“”

பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே தான் நடத்தி வந்த அல்வாக் கடையை அநாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் தம்பி, அம்மாவாசை. இப்படிபட்ட உத்தமர்கள் தான் இந்த தேசத்துக்கு ஒரு வெளிச்சத்தை உண்டாக்க முடியும்!

“”

அமாவாசைங்க, அதனால நாளு நல்லா இருக்குன்னு மனு கொடுக்கறதுக்கு வந்திருக்கனுங். பட் மை நேம் இஸ் நாகராஜ சோழன் எம்.ஏ., சன் ஆஃப் ராஜேந்திர சோழன், கிரான்ட் சன் ஆஃப் ராஜராஜ சோழன், தஞ்சாவூர். அந்த ராஜ பரம்பரைல வந்தவங்க தாங்க நானும். அந்த பரம்பரைல வந்த கடைசி இளவரசன் நான்தாங்க. அந்த காலத்துல எங்க தாத்தா கூட்டுன ராஜ சபைக்கு மந்திரிங்க எல்லாம் வந்துட்டு இருந்தாங்க. இப்ப மந்திரி சபைக்கு நான் போக வேண்டியதா இருக்குதுங்க.

“”

சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

“”

ஜெயிச்சவனுக்கெல்லாம் ஜெ போட்டுத் தான்டா நாசமா போயிட்டிங்க

“”

``சாதியாவும் மதமாவும் நம்ம சனங்க பிரிஞ்சு கிடக்குற வரைக்கும் நம்மள மாதிரி அரசியல்வாதிங்க குதிரை ஏறிட்டே இருக்க வேண்டியதுதான். ``அப்ப நம்மள மாதிரி ஆளுங்க சந்தோசமா இருக்கறதுக்குத் தான் சாதியவே கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு நினைக்குறேன். அன்னைக்கு அமெரிக்காவ கொலம்பஸ் கண்டுபிடிச்சான்ன சொன்ன… இந்த சாதிக் கருமாந்தரத்த யாரு கண்டுபிடிச்சவன்?” ``மந்திரம் ஓதுறவனுங்க கண்டுபிடிச்சாங்க… மந்திரிமாருங்க அதை கெட்டியா புடிச்சிட்டானுங்க” ``ஓ அப்ப இந்த சாதிக் கருமாந்தரத்த ஒழிச்சிட்டம்னா ஜனங்க நிம்மதியா இருப்பாங்க போல இருக்குதே” ``ஜனங்க நிம்மதியா இருப்பாங்க, நாம தான் சோத்துக்கு சிங்கி அடிக்கணும்!”

“”

அரசியல் புனிதமானது தான். அதுல தன் இனத்துக்காக போராடுன நல்லவங்களும் இருக்குறாங்க, உன்ன மாதிரி இஷ்டத்துக்கு வாங்கித் திங்குற பன்னிகளும் இருக்குது. பன்னிகள் கூட்டம் அதிகமாயிட்டதால அதுல சாக்கடை நாத்தம் அடிக்குது. பன்னிகளை அடிச்சுத் தூக்கிட்டு டெட்டால் ஊத்தி கழுவிட்டோம்னா நீட்டா இருக்கும்.