`கிரிக்கெட் ஆர்வம் முதல் ஆசிரியர்களின் சீண்டல் வரை’ - மு.க.ஸ்டாலின் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...

மு.க.ஸ்டாலின் தன்னுடைய இளம் வயதில் `வெற்றி நமதே!’, `முரசே முழங்கு’ போன்ற தி.மு.க-விற்கான பிரச்சார நாடகங்களில் நடித்தார். இதில் `முரசே முழங்கு’ நாடகத்தில் கலைஞரின் உருவமேற்று நடித்தார். இது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த 2003-ம் ஆண்டு, சென்னையின் பழம்பெரும் கல்லூரியான ராணி மேரி கல்லூரியை இடித்து தலைமைச்செயலகம் கட்டப்படும் என  அறிவித்தார். இதற்கு எதிராக மாணவர்களுடன் இணைந்து போராடினார். அப்போது, கைது செய்யப்பட்டு கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின்னர், இந்த முடிவினை ஜெயலலிதா கைவிட்டார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

தமிழகத்தில் சுமார் 25 ஆண்டுகாலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. 1996-ம் கலைஞர் முதல்வரானபோது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை அவரையே சாரும்.

மு.க.ஸ்டாலின் சென்னை கிறிஸ்தவ கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவர் படிக்கும்போது தன்னை பிரபல அரசியல்வாதியின் மகன் என ஒருபோதும் காட்டிக்கொண்டது இல்லை என அவரது வகுப்புத் தோழர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க-விற்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் அவரை வம்புக்கு இழுப்பார்களாம். எனினும் அமைதியாக தன்னுடைய படிப்பில் மட்டுமே ஸ்டாலின் கவனத்தை செலுத்துவாராம்.

மு.க.ஸ்டாலின் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை `தாய்மொழி கல்வி சிறந்ததா?’ அல்லது `பிறமொழி கல்வி சிறந்ததா?’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. இதில், `தாய்மொழிக் கல்வியே சிறந்தது’ என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் வாதிட்டார். எனினும், சக மாணவர்களின் எதிர்க்கருத்துகளையும் ரசித்து கேட்பாராம்.

மு.க.ஸ்டாலினுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். பந்து வீசுவது மற்றும் ஃபீல்டிங் செய்வதில் அவருக்கு அலாதி பிரியம்.

பேரறிஞர் அண்ணாவிற்கு இளைஞர் தி.மு.க சார்பில் மணிவிழா கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அனுமதி வாங்க ஸ்டாலின், அண்ணாவை சந்திக்க சென்றுள்ளார். ஆனால், அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை என அவரது உதவியாளர்கள் ஸ்டாலினை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையறிந்த அண்ணா உடனே, ஸ்டாலின் வீட்டுக்கு கார் அனுப்பி அழைத்து வர செய்துள்ளார். மகிழ்ச்சியுடன் சென்ற ஸ்டாலின் பிடிவாதமாய் நின்று விழாக்கான தேதியையும் வாங்கி வந்துள்ளார்.

``எனக்கு ஸ்டாலின் என்ற பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் அவர்கள் எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்தார். அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை” - மு.க.ஸ்டாலின்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருந்தபோது சுமார் 1.59 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கினார். அப்போது, இந்த திட்டம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக இருந்தது. இன்றுவரை வெற்றிகரமான திட்டமாகவும் பெண்களை சொந்த காலில் நிக்க வைக்கும் திட்டமாகவும் உள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற வறட்சியான மாவட்டங்களில் மக்கள் குடிநீர் இன்றி தவித்தனர். சுகாதாரமற்ற குடிநீரால் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகினர். அப்போது, அவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க கூட்டுக் குடிநீர்த்திட்டம் என்பதை அறிமுகப்படுத்தி அசத்தினார், மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலினைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்ய தகவலையும் கமெண்டில் சொல்லுங்க!