வர்தா - கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ரோனு, கியான்ட், நடா ஆகிய புயல்கள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், கடைசியில் உருவான வர்தா புயல் அதிதீவிர புயலாக மாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசியது. இதனால், சென்னை திக்குமுக்காடியது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பல நாள்கள் மின் விநியோகங்கள் நிறுத்தப்பட்டன.