ஜப்பானைச் சேர்ந்த சியுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் ஆகியவற்றிற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொழிலாளர் பொருளாதாரத்திற்காக கனடாவைச் சேர்ந்த டேவிட் கார்ட் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு பொருளாதரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசுவா ஆங்கிரிஸ்ட், டச் - அமெரிக்கரான கைடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.