`ஜெனிஃபர், மாயா, கங்கா...’ - ஜோதிகாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள், வசனங்கள்!

ஜோதிகா, தனது கரியரின் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிகரமா அடிச்சு விளையாடிட்டு இருக்காங்க. அவங்க நடிச்சதுல மறக்க முடியாத கேரக்டர்கள் மற்றும் வசனங்கள்...

ஜெனிஃபர் (குஷி)

சென்ஸ் இல்ல... மேனஸ் இல்ல... பப்ளிக்ல எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியல... ரோட்ல லவ் லெட்டர் குடுக்குற..?!

வாணி (லிட்டில் ஜான்)

எனக்கு என்ன புடிக்கும்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்க என்னக் கொடுத்தாலும் எனக்கு ஓகே... இல்ல!

மாயா (காக்க காக்க)

நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும். உங்கக்கூட நான், என் வாழ்க்கையை வாழணும். உங்கக்கூட நான் இருக்கணும். உங்ககூட சிரிச்சுப் பேசணும். சண்டை போடணும். உங்க தோள்ல சாஞ்சு அழணும். இன்னைக்கு மாதிரி எப்பவுமே உங்க மேல நான் பைத்தியமா இருக்கணும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கங்கா (சந்திரமுகி)

நான் இப்போ என்னமோ பண்ணேல்ல.. இல்லை... நான் இப்போ என்னமோ பண்ணேன். எனக்கு என்னமோ ஆகுது. என்னை மன்னிச்சுருங்க.

ஆராதனா (வேட்டையாடு விளையாடு)

உங்ககூட பேசுனதுக்கு அப்புறம் கஷ்டம் தெரியல. 

குந்தவி (சில்லுனு ஒரு காதல்)

நான் உன்னை மட்டும் லவ் பண்ணல கௌதம். உன்னோட ஆசையை... உன்னோட கனவை... உன்னோட உணர்வை... எல்லாத்தையும் சேர்த்துதான் லவ் பண்றேன்.

அர்ச்சனா (மொழி)

அமைதிதான் `மொழி’யில் ஜோதிகாவின் மொழி. அவ்வளவு அழகான விஷயங்களை, கோபத்தை, காதலை அமைதியின் வழியா கடத்தியிருப்பாங்க. 

வசந்தி (36 வயதினிலே) 

இந்தியால 14 பிரதமர்கள்ல ஒருத்தர் மட்டும்தான் பெண். 15 ஜனாதிபதிகள்ல ஒருத்தர் மட்டுதான் பெண். ஏன் இந்த தேசத்துல அறிவாளியான, தகுதியான பெண்களே இல்லையா? இல்லை அவங்க கனவுகளை யாரும் தடை பண்ணிட்டாங்களா? Who decides the expiry date of women’s dream? 

பிரபாவதி (மகளிர் மட்டும்)

பொம்பளைங்களுக்கு கல்யாணம் ஒரு மாயாஜால ஜெயில்தான். எட்டி உதைக்கணும். உதைக்கிற உதைல ஒண்ணு திறக்கணும்; இல்லை, ஜெயில் கதவு உடையணும்.

கீதா ராணி (ராட்சசி)

வாழ்க்கை ஒரு அழகான பயணம் அப்டினு வச்சிக்கலாம். அதோட எண்ட்ல ஒரு மிகப்பெரிய தங்கமும் வைரமும் குவிஞ்ச புதையல் நமக்காக காத்திட்டு இருக்கும். கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதை நோக்கி நாம போய்கிட்டே இருப்போம். போற வழியில சின்ன சின்ன துண்டா தங்கம் சிதறி கிடக்கும். நாம அதைப் பார்த்துட்டு புதையல் கிடைச்சிடுச்சுனு நினைச்சோம்னு வைங்க. பயணம் அதோட ஸ்டாப். யார் அதைக் கண்டுக்காம தொடர்ந்து பயணிக்கிறாங்களோ... அவங்களுக்குதான் புதையல்.