எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது!
“
வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம். நான் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறேன். ஆகவே நான் பேச விரும்புகிறேன்!
“
காடுகள் மாத்திரம்தானா ரகசியங்களைப் பொதிந்து வைத்துக்கொண்டிருக்கின்றன. மனிதர்களும்தான்! ஒவ்வொருவரிடமும் எத்தனை ரகசியங்கள்!
“
முழுமைபெற்ற மனிதனுக்கு, கடவுள் அவசியமில்லை என்று மார்க்ஸ் சொல்கிறார். வறுமைதான் அவனைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. சக மனிதன் மீது நம்பிக்கை வைக்க முடிந்தால், மதம் அவசியமின்றி போய்விடும்.
“
இசையில் ஈடுபடும் ஒருவன் ஒருபோதும் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டான். மனிதக் கறைகளைக் கழுவிவிடக்கூடியது சங்கீதம்.
“
தனியாக இருப்பது பயம் தருவதாக இருக்கிறது. உறக்கம் கலைப்பதாக இருக்கிறது. நானும் நானும் மட்டுமே என் வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனாலும், வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. கொடுத்தே தீரணும் கடன்.
“
இசை எல்லோருக்கும் பொதுவானது. சாதி, மத பேதங்களைக் கடந்து இசை ஒரு மனிதனின் உணர்வுகளை குணநலன்களைப் பண்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
“
தமிழகத்தின் அரசியலைப்போல இருக்கிறது இலக்கியத் துறையும். தத்துவம் அற்றது நம் அரசியல். அறம் குறைந்தது நம் இலக்கியத் துறை. நன்றாக எழுதுபவரை, நன்றாக எழுதுகிறார் என்று சொல்லாதவர்கள் நம் நண்பர்கள்.
“
பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்றது மனது. அதைப் பறக்கக் கூடாது என்று எப்படி சொல்வது?
“
மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த சிநேகத்தை மனிதர்களைப்போல மறுபரிசீலனை செய்வது இல்லை.
“